கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில், தனது துறையின் லாரியை உட்படுத்திய விபத்தை முழுமையாக விசாரிக்கும்படி குடிநுழைவுத் துறையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.
விசாரணையில், விபத்துக்கு சட்ட விதி மீறல் அல்லது கவனக்குறைவு காரணம் என்பது தெரிய வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமென, அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.
அதே வேளை, அதிகாலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் , மாஜூ ஜங்சன் ( Maju JUnction ) சாலை சந்திப்பில் , குடிநுழைவுத் துறையின் லாரி, சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறியதால் ஏற்பட்ட விபத்தில் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் காயமடைந்தார்.




