கோலாலம்பூர், ஜூலை 8 - இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அம்மாநிலத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து அம்மாநிலத்தின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படக் கூடும். அந்த நெரிசலைத் தவிர்க்க, தத்தம் தொகுதிகளுக்குத் திரும்புபவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு மலேசிய நெடுஞ்சாலை வாரியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஸ்னி மொஹமெட் கேட்டுக் கொண்டார்.
வாகனமோட்டிகளின் பாதுகாப்பான சுமூகமான பயணத்தை உறுதிச் செய்ய, சாலைகளை மூடும் பணிகளை நெடுஞ்சாலை வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும்.
வாக்களிப்புக்காக ஜோகூருக்கு திரும்புபவர்கள் TuJu செயலியின் மூலம் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டச்.என்.கோ (Touch'n Go), மின்னியல் பணப்பை (e-wallet ) வங்கிடெபிட் அட்டை ஆகியவற்றில் போதிய பாக்கி இருப்பதை உறுதிச் செய்யுமாறும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.




