ஜோர்ஜ்டவுன், ஜூலை 3 - 9 ஆண்டுகளுக்கு முன்பு, பகடிவதைக்கு ஆளாகிய தி.நவீனை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தற்காப்பு வாதம் புரிவதற்கான வழக்கு விசாரணை தேதி முடிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும், அதைத் தொடந்து அக்டோபர் 12-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 8 நாட்களுக்கு அந்த வழக்கு விசாரணை நடைபெறுமென ஜோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
26 வயது ஜே.ராகசுதன், 26 வயது எஸ்.கோகுலன் உட்பட சம்பவம் நிகழ்ந்த போது பதின்ம வயதினராக இருந்த மேலும் இருவரும் தற்காப்பு வாதம் புரியும் படி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அந்நால்வரையும் வழக்கறிஞர் மன்விர் சிங் டிலோன், ஆர்.தேவன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர்.




