ஆறாம் படிவ மாணவர்களுக்கான ஆதரவு தொடரும்: கல்வி அமைச்சர் ஃபத்லினா

25 மே 2026, 2:13 AM
ஆறாம் படிவ மாணவர்களுக்கான ஆதரவு தொடரும்: கல்வி அமைச்சர் ஃபத்லினா

கோலாலம்பூர்: பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வித் திட்டங்கள் இனி உயர் கல்வி அமைச்சின் (KPT) கீழ் நிர்வகிக்கப் படவிருந்தாலும், ஆறாம் படிவ மாணவர்களுக்குத் தனது அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்கும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சீடேக் உறுதியளித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய திட்டங்களும் உயர் கல்வி அமைச்சால் மேற்பார்வையிட படும் என்ற முடிவின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

"ஒருவேளை இது ஆறாம் படிவ மாணவர்களுடன் எனது கடைசி உரையாக இருக்கலாம். இனி அவர்கள் உயர் கல்வி அமைச்சின் கீழ் ஒப்படைக்கப் படுவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

"நாட்டின் கல்விக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆறாம் படிவ மாணவர்களை நான் மிகவும் இழப்பேன்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

கல்வி அமைச்சு இதுவரை பல்வேறு முயற்சிகளைச் செயல் படுத்தியுள்ளதாக ஃபத்லினா குறிப்பிட்டார். அவற்றில், மாணவர்களே தங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் மூலம் தேசிய ஆறாம் படிவ மாணவர் பிரதிநிதிக் குழுவை நிறுவியதும் அடங்கும். மேலும், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) மற்றும் மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் (UKM) போன்ற பொது உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆறாம் படிவத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி, ஆறாம் படிவ மாணவர்களுக்குத் தொடக்கக் காலப் பள்ளி உதவித்தொகை வழங்குவது, மேலும் பல ஆறாம் படிவக் கல்லூரிகளை நிறுவுவது போன்ற முயற்சிகளையும் தனது அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

"தேசிய ஆறாம் படிவ மாணவர் பிரதிநிதிக் குழுவின் செயல்பாடுகளுக்காக ஆண்டுதோறும் 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

இதனிடையே, பினாங்கு மாநில அளவில் நடைபெற்ற பல்கலைக்கழகத்திற்கு முந்தைய மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு ஃபத்லினா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் மாணவர்களின் குரல் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.