ஷா ஆலம், ஏப்ரல் 7: நாட்டில் காடுகள், புதர்கள், தோட்டங்கள் அல்லது பண்ணைகள் சம்பந்தப் பட்ட தீ விபத்து சம்பவங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 31 வரை 12,938 ஆகப் பதிவாகி, கடுமையான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பதிவான 9,941 சம்பவங்களை விட அதிகமாகும். இது குறுகிய காலத்தில் கவலைக்குரிய போக்கைக் காட்டுகிறது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடு) டத்தோ Ir Ts அஹ்மத் இஸ்ராம் ஒஸ்மான், தற்போது நிலவும் வெப்பமான வானிலையே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று நம்புவதாகக் கூறினார்.
"இந்த ஆண்டு தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்ததற்குக் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை, கட்டுப்பாடற்ற திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு இல்லாமை போன்ற பல காரணிகள் இருப்பதாக நம்பப்படுகிறது," என்றார்.
ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி, கோத்தா பாருவில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது (APC) மற்றும் 30 ஆண்டு கால சேவைச் சான்றிதழ் வழங்கும் விழாவிற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
அவரது கூற்றுப்படி, புதர்த்தீ 11,147 சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து காட்டுத்தீ 1,047 சம்பவங்களும், தோட்டம் அல்லது பண்ணைத் தீ 744 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மொத்த வழக்குகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவை புதர்த்தீயாக இருப்பதால், இது தீவிர கவனம் தேவைப்படும் முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.
சிலாங்கூர் 337 சம்பவங்களுடன் அதிக காட்டுத்தீயைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து கிளந்தான் (123), பினாங்கு (121), சபா (113) மற்றும் கெடா (102) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
புதர்த்தீயைப் பொறுத்தவரை, கெடா 2,524 சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜொகூர் (1,886), மலாக்கா (1,010), கிளந்தான் (937) மற்றும் பேராக் (759) உள்ளன.
இதற்கிடையில், ஜொகூர் 359 சம்பவங்களுடன் அதிக தோட்டம் அல்லது பண்ணைத் தீயைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (165), பேராக் (54), கெடா (29) மற்றும் கிளந்தான் (25) உள்ளன.
இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் முயற்சியில், திறந்தவெளி எரிப்புக்கு எதிரான அமலாக்கத்தைக் கடுமையாக்குதல், ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரித்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தல் மற்றும் ட்ரோன்கள், முன் எச்சரிக்கை அமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன் படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை JBPM முன் மொழிந்துள்ளது.
மேலும், திறந்தவெளி எரிப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் திறமையான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்படும்.
நாட்டில் அதிகரித்து வரும் தீ சம்பவங்கள் இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் 31 வரை 12,938 ஆகப் பதிவாகியுள்ளது
7 ஏப்ரல் 2026, 7:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மின்னணுக் கழிவுகள் இறக்குமதிக்கு ஏப்ரல் 1 முதல் முழுமையான தடை அமல்
Pakiya
2 ஏப்ரல் 2026

---
Kempen Tanpa Beg Plastik : Bilangan hari bakal ditambah
Unknown Author
30 மார்ச் 2016
---
Fiesta Wanita : Kerajaan Selangor memperhebatkan agenda memartabat wanita Selangor
Unknown Author
7 மார்ச் 2016
national
வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
Pakiya
14 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




