பெலம், 22 நவம்பர்- பிரேசில், பெலமில் நடைபெறும் COP 30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
இருப்பினும், நேற்று ஏற்பட்ட அத் தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் போது இத் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ, கட்டிடத்திற்கும் பரவத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இவ்விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இவ் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரேசில் பருவநிலை மாநாட்டில் தீ
22 நவம்பர் 2025, 4:12 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது அர்சனல்
Mavitthran
4 டிசம்பர் 2025

national
மலேசியா சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு; எந்த வல்லாதிக்கத்துக்கும் அடி பணியாது: அன்வார்
Pakiya
8 நவம்பர் 2025

---
JURNAL BERITA : MB pilih Brazil juarai Piala Dunia 2014
admin
13 ஜூன் 2014
national
நாடு தழுவிய அளவில் திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன
Shalini Rajamogun
8 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




