கிழக்கு கடற்கரை நோக்கிய போக்குவரத்து நெரிசல் தொடங்கியது, வடக்கு-தெற்கு வழித்தடம் இன்னும் சீராக உள்ளது

18 மார்ச் 2026, 3:55 AM
கிழக்கு கடற்கரை நோக்கிய போக்குவரத்து நெரிசல் தொடங்கியது, வடக்கு-தெற்கு வழித்தடம் இன்னும் சீராக உள்ளது

கோலாலம்பூர், மார்ச் 18 - ஐடில்ஃபித்ரி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கு கடற்கரை நோக்கிய போக்குவரத்து இன்று காலை முதல் நெரிசலாகக் காணப்படுகிறது.

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (LLM) பேச்சாளர் கூறுகையில், கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வரையிலும், புக்கிட் திங்கியிலிருந்து லெந்தாங் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய போக்குவரத்து இன்னும் சீராக உள்ளதாகவும், பழுதடைந்த லாரி ஒன்றின் காரணமாக பண்டார் பாருவிலிருந்து ஜாவி வரை மட்டுமே நெரிசல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நேற்று நள்ளிரவு முதல் நாளை இரவு 11.59 மணி வரை 50 விழுக்காடு சுங்கக்கட்டணச் சலுகை வழங்கப்படுவதால், இன்று மதியம் முதல் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என LLM எதிர்பார்க்கிறது," என்று அவர் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளைக் கடைப் பிடிக்குமாறும், பயணத்தின் போது தங்களது வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை எப்போதும் பேணுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

MyPLUS-TTA செயலி மூலம் பயண நேரப் பரிந்துரை அட்டவணையை (TTA) பார்த்து தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு வாகன ஓட்டிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், சமீபத்திய போக்குவரத்துத் தகவல்களைப் பெற PLUSLine கட்டணமில்லா தொலைபேசி எண் 1-800-88-0000 மற்றும் @plustrafik X தளம் அல்லது LLM-இன் 1-800-88-7752 மற்றும் @llmtrafik X தளம் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.