ஷா ஆலாம், மார்ச் 17: கிள்ளானைச் சுற்றியுள்ள 80 ஆதரவற்றோர் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், கிள்ளான் அரச நகர மன்றம் (எம்.பி.டி.கே) அண்மையில் கிள்ளான், சென்ட்ரோ வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
எம்.பி.டி.கே-யின் நிறுவன தொடர்புத் துறை இயக்குநர் நோர்ஃபிஸா மஹ்ஃபிஸ் கூறுகையில், இந்த நிகழ்வு காவல்துறை உட்பட பல தரப்பினரின் ஒத்துழைப்புடன், வணிக வளாகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) முயற்சியின் கீழ் செயல்படுத்தப்பட்டது என்றார்.
"தனியார் துறை, காவல்துறை மற்றும் எம்.பி.டி.கே இடையேயான இந்த ஒத்துழைப்பு, கிள்ளான் அரச நகரத்தில் மிகவும் வலுவான ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாகும்."
"நமது நகரத்தின் சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய, இதுபோன்ற ஒருங்கிணைந்த முயற்சி நமக்குத் தேவை," என்று நகர மேயர் சார்பில் அந் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் கூறினார்.
அதே நிகழ்வில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு குடியிருப்பாளர்களை மகிழ்விப்பதற்காக, ஐந்து பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மையங்களுக்கு (பிடிகே) எம்.பி.டி.கே மொத்தம் 2,500 ரிங்கிட் நன்கொடையாக வழங்கியது.
ஹனீன் பிர்தௌஸ் பராமரிப்பு மையம், சாயாங் சிறப்புக் குழந்தைகள் பராமரிப்பு மையம், கோத்தா ராஜா கிள்ளான் பிடிகே, நுர் காசி இயக்கம் மற்றும் மதரஸா உலுமுல்குரான் வல் அஹாடித் ஆகியவையே அந்த ஐந்து மையங்களாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளும் கல்வியைத் தொடர்வதில் ஆர்வத்துடன் இருந்து, சமூகத்திற்குச் சேவை செய்து பயனளிக்க வேண்டும் என்றும் நோர்ஃபிஸா கேட்டுக்கொண்டார்.
"நீங்கள் அனைவரும் முழுமையாக வளர, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நட்புறவான நகரச் சூழலை வழங்க எம்.பி.டி.கே மட்டத்தில் நாங்கள் எப்போதும் முயற்சிப்போம்," என்று அவர் மேலும் கூறினார்.
கிள்ளானில் 80 ஆதரவற்றோர், சிறப்புத்தேவையுடைய சிறுவர்களுக்கு எம்.பி.டி.கே உபசரிப்பு
17 மார்ச் 2026, 5:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது
Pakiya
29 நவம்பர் 2025

---
156 keluarga terima bantuan sempena Ramadan-MBSA
admin
3 ஜூன் 2016
---
JURNAL BERITA - KLIA 2, PM patut bertindak sebelum kos meningkat RM5 bilion.
Unknown Author
1 ஏப்ரல் 2014
selangor
உரிமம் பெறாத இரண்டு தொழிற்சாலைகளுக்கு 4,000 ரிங்கிட் அபராதம்
Shalini Rajamogun
9 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




