மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது

29 நவம்பர் 2025, 11:23 AM
மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது
மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது
மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது
மீடியா சிலாங்கூர் CSR திட்டம் தன்னார்வலர்களை உருவாக்கி சமூக உணர்வை வளர்க்கிறது

கோலா லங்காட், நவம்பர் 29 —   மீடியா சிலாங்கூர் சென் பெர்ஹாட் (Media Selangor Sdn Bhd) தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டமான “மீடியா சிலாங்கூர் மசுக் கம்போங்” மூலம் சமூகத்தில் தனது பங்களிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

இதன் முதல் பதிப்பு இன்று கோலா லங்காட்டில் உள்ள கம்போங் ஓராங் அஸ்லி தஞ்சோங் சிப்பாட்டில் நடைபெற்றது.இந்த CSR திட்டத்தில் இசை அறைக்கு சுவரோவியம் வரைதல், ஃபுட்சால் மைதானத்தை பழுதுபார்த்தல், பிஸ்கட் தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை, உடல் நலப் பரிசோதனை, பள்ளி பைகள் மற்றும் உணவுக் கூடைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்றன.

இவை அனைத்தும் உத்திகரமான கூட்டாளிகளின் ஆதரவுடன் நடைபெற்றது.மீடியா சிலாங்கூர் சென் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் பாரீட் முகமட் அஷாரி கூறுகையில், இந்த முயற்சி கும்புலன் ஹார்த்தானா சிலாங்கூர் பெர்ஹாட் (KHSB), செல்கேட் கார்ப்பரேஷன், யயாசான் வாரிசான் அனக் சிலாங்கூர் (Yawas), சிலாங்கூர் யூட்டிலிட்டி காரிடார் (Kusel) மற்றும் கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) ஆகியவற்றுடன் இணைந்து சுமார் ரிம 30,500 ஒதுக்கீட்டில் செயல் படுத்தப் பட்டது.

“மீடியா சிலாங்கூர் மசுக் கம்போங் போன்ற திட்டங்கள் கிராமப்புற சமூகங்களை அணுகுவதற்கு சிறந்த தளத்தை வழங்குகின்றன. பெரிய திட்டங்களின் கவனத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் அவர்களை நாங்கள் நேரடியாக அணுகி பயனை அளிக்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.

அடுத்த ஆண்டு இந்த CSR திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஊழியர்களிடையே தன்னார்வலர்களை வளர்ப்பதற்காகவும் அவர் தெரிவித்தார்.

“கல்வி, நலன் மற்றும் உடல் நலம் ஆகியவற்றை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. எங்கள் ஊழியர்கள் செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று பரீட் கூறினார்.

மீடியா சிலாங்கூரின் தலைமை ஆசிரியர் நூர் அசாம் ஷைரி கூறுகையில், தன்னார்வலர்களை கலாச்சாரம் ஆக்குவது நிறுவனத்திற்கு முக்கியமான அணுகுமுறை என்றார். “ஒவ்வொரு ஊழியரும் ஒரு வருடத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான CSR மணிநேரங்களை நிறைவு செய்ய வேண்டும். இது வெறும் பணியல்ல, மீடியாவுக்கும் சமூகத்தை பணி மற்றும் கல்வி கற்பிப்பதற்கும் உதவுவதற்கும் பொறுப்பு உள்ளது என்ற மதிப்பீட்டை ஊட்டுவதாகவும்,” என்றார் அவர்.

மீடியா சிலாங்கூர் டிஜிட்டல் தயாரிப்பாளர் அஸ்ரி சப்ஃபிக்கு இது முதல் CSR அனுபவம். இது ஒரு ஊடகவியலாளரின் உண்மையான பொறுப்பு குறித்து புதிய தோற்றத்தை அளித்ததாக அவர் கூறினார். “எங்கள் வேலை பெரும்பாலும் செய்தி பதிவு செய்வதுதான். ஆனால் இந்த திட்டத்தில் நாங்களே செயல்படுத்துபவர்களாக மாறினோம். இது எங்களை சமூகத்திற்கு  அருகில் கொண்டு வந்து, அவர்களின் நிலைமைகளை நன்கு புரிந்து கொள்ள உதவியது,” என்றார் அவர்.

அதேபோல், மீடியா சிலாங்கூர் செய்தியாளர் ஷாலினி ராஜமோகன் கூறுகையில், கிராமத்தில் ஓராங் அஸ்லி சமூகத்தினரை சந்திப்பது அவர்களது கலாச்சாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் புரிந்து கொள்ள ஈடில்லா வாய்ப்பாக அமைந்தது என்றார்.ஒரு நாள் நடைபெற்ற இந்த திட்டத்தில் சுமார் 20 மீடியா சிலாங்கூர் ஊழியர்கள் பங்கேற்று, கிராமத்தின் இசை அறையில் நவீன மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளின் சுவரோவியத்தை ஒன்றாக வரைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.