தீ விபத்து போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வீடுகளைப் பாதுகாப்பான நிலையில் விட்டுச் செல்வதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்து.

14 மார்ச் 2026, 2:36 AM
தீ விபத்து போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வீடுகளைப் பாதுகாப்பான நிலையில் விட்டுச் செல்வதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்து.

செலாயாங்: மார்ச் 14: ஈகைத் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொதுமக்கள், தீ விபத்து போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வீடுகளைப் பாதுகாப்பான நிலையில் விட்டுச் செல்வதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறும் முன் அனைத்து மின்சாதனங்களின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டு, பிளக்குகள் அகற்றப்பட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பண்டார் பாரு செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் கூறினார்.

"எரிவாயு சிலிண்டரின் வால்வையும் மூட வேண்டும், கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பாதுகாப்பாகப் பூட்ட வேண்டும். மேலும் வீட்டில் அபாயகரமான பொருட்களை விட்டுச் செல்லக்கூடாது."

"நீங்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால், உங்கள் வீடு பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிசெய்யுங்கள். பயன்படுத்தப் படாத எரிவாயு சிலிண்டர்கள் அல்லது மின்சாதனங்கள் அணைக்கப்பட வேண்டும்" என்று தீயணைப்புப் படையின் மூத்த உதவி கண்காணிப்பாளர் முகமது அக்மல் முகமது கைரி கூறினார்.

தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் அன்ஃபால் சாரியுடன் பண்டார் பாரு செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய ஊழியர்களுக்காக நேற்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், சாலைப் பயனர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், தங்கள் வாகனங்களின் இயந்திர எண்ணெய், டயர் காற்றின் அழுத்தம் மற்றும் பிற முக்கிய பாகங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முகமது அக்மல் கூறினார்.

"தீ விபத்துகளைத் தவிர, சாலை விபத்துகளும் ஒரு வகையான பேரிடராகும். எனவே, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்; கவனக்குறைவாகவோ, மறதியாகவோ இருக்க வேண்டாம்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் டத்தோ வான் எம்.டி. ரசாலி வான் இஸ்மாயில், வீட்டை விட்டு வெளியேறும்போதும் அல்லது சொந்த ஊர் திரும்பும் பயணத்தின்போதும் பாதுகாப்பு அம்சங்களில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று நினைவுபடுத்தியிருந்தார்.

பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பு உயர் மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்ய, 'சியாப் சியாகா ராயா' தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தின் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை சிலாங்கூர் JBPM தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆண்டு ஈகைத் திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் JBPM ஊழியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பண்டிகைக் காலங்களில் துறையின் தயார்நிலை உச்சத்தில் இருப்பதை உறுதிசெய்ய மீதமுள்ளவர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

#BalikKampung #KeselamatanRaya #BombaMalaysia #SafetyFirst #Aidilfitri #Selangor #FireSafety

original news : https://mediaselangor.com/ms/2026/03/347792

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.