வரி நிலுவைத் தொகை RM2.9 மில்லியன் எட்டியது; ஆயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

3 மார்ச் 2026, 8:13 AM
வரி நிலுவைத் தொகை RM2.9 மில்லியன் எட்டியது; ஆயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

ஷா ஆலம், மார்ச் 3: மதிப்பீட்டு வரி நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதற்காக, அம்பாங் ஜெயா நகராட்சி  இந்த மாதம் சொத்து உரிமையாளர்களுக்கு சுமார் 2,000 நோட்டீஸ்களை வழங்கியுள்ளது.

'The Star' செய்தியின்படி, பண்டான் பெர்டானா மற்றும் தாமான் புக்கிட் தெரத்தாய் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கணக்கு வைத்திருப்பவர்கள் இதில் அடங்குவர்; இவர்களின் மொத்த நிலுவைத் தொகை 2.9 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.

 "தங்கள் வளாகங்களில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க, பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்," என்று அதன் துணைத் தலைவர் ஹஸ்ரோல்நிஜாம் ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 103.5 மில்லியன் மதிப்பீட்டு வரியையும், 20.1 மில்லியன் நிலுவைத் தொகையையும் வசூலிக்க அம்பாங் ஜெயா நகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜனவரி 31 வரை, 16.3 மில்லியன்  (15.8 விழுக்காடு) வரியாகவும், 1.4 மில்லியன் (7.3 விழுக்காடு) நிலுவைத் தொகையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

 2026-ஆம் ஆண்டிற்கான முழு வரியையும் ஒரே தவணையில் செலுத்துபவர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள MPAJ-இன் அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்கத் தகுதி பெறுவர். இதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இதற்கிடையில், பிப்ரவரி 24 வரை 7,700 வணிக வளாக உரிமையாளர்கள் தங்கள் உரிமங்களைப் புதுப்பித்துள்ளனர். இதன் மூலம் 6.6 மில்லியன் வருவாய் கிடைத்துள்ளது. உரிமத்தைப் புதுப்பிக்கத் தாமதமாக்கிய 850 உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் RM306,000  வசூலிக்கப்பட்டுள்ளது.

 மேலும், சுமார் 4,000 குறுந்தொழில்முனைவோர்கள் தங்கள் உரிமங்களைப் புதுப்பித்ததன் மூலம் 1.8 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மார்ச் 6 முதல் ஏப்ரல் 7 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள லேமாங் (Lemang) வியாபாரிகளுக்குத் தற்காலிக உரிமங்களை வழங்கத் தொடங்கியுள்ளதாகவும் ஹஸ்ரோல்நிஜாம் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.