ஷா ஆலாம், மார்ச் 2- அவிஷன் ஏசியா பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனம், பெண்கள் மேம்பாட்டுத் துறை மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்த மகளிர் பயிற்சித் திட்டத்தின் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 30 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சமூக வலுவூட்டல் மற்றும் உள்ளூர் சமூக-பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பெண்களின் திறன், அறிவு மற்றும் சுய ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அனைத்துப் பங்கேற்பாளர்களும் வரும் காலத்தில் தொடர்ந்து பல வெற்றிகளைப் படைக்க வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பங்கேற்பாளர்கள் தங்களின் சுய மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்க, புகழ்பெற்ற வீரமங்கை சிபில் கார்த்திகேசுவின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஷா ஆலம் 14-வது மண்டல குடியிருப்பாளர் பிரதிநிதித்துவக் குழுவின் உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன், பட்டதாரிகள் இந்தத் திட்டத்துடன் மட்டும் கற்றலை நிறுத்திக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்.
பெண்கள் தங்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கிக் கொள்ள, தங்களின் தகுதிகளையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெண்களை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழா, பங்கேற்பாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.
நிறைவாக, இந்தச் சிறப்பு நிகழ்வானது ஒற்றுமை மற்றும் நன்றியுணர்வுடன் கூடிய நோன்பு துறப்பு விருந்து உபசரிப்புடன் இனிதே நிறைவுற்றது.








