கோத்த கினாபாலு, மார்ச் 1 — இன்று காலை 8 மணி நிலவரப்படி, சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 6,462 பேராகக் குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 2,173 குடும்பங்களைச் சேர்ந்த 6,595 பேர் பதிவாகியிருந்தது.
பியூஃபோர்ட், மெம்பகுட் மற்றும் டெனோம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்தம் 30 தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்று சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் (JPBN) தெரிவித்தது.
பியூஃபோர்ட் மற்றும் மெம்பகுட் சபாவின் மேற்கு கடற்கரையில், கோத்த கினாபாலுவின் தென்மேற்கில் அமைந்துள்ளன. அதே நேரத்தில், டெனோம் மாநிலத்தின் உட்புறத்தில் அமைந்துள்ளது.
மூன்று மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் மொத்த எண்ணிக்கை 155 ஆக உள்ளது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.





