வர்த்தக வளாகங்களில் அதிரடி சோதனை: பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த பொருட்கள் பறிமுதல்

27 பிப்ரவரி 2026, 4:06 AM
வர்த்தக வளாகங்களில் அதிரடி சோதனை: பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த பொருட்கள் பறிமுதல்

ஷா ஆலம், 27 பிப்: சுபாங் ஜெயா மாநகராட்சி, தனது தலைமையகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வணிக வளாகங்களில் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜாலான் SS 19 மற்றும் ஜாலான் USJ 2 ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Convenience Stores) விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

 இந்த ஆய்வின்போது, பல வணிக நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி பொது இடங்களில் நாற்காலிகள், மேசைகள், நடமாடும் விற்பனை ஸ்டால்கள் மற்றும் சக்கரங்கள் கொண்ட அலமாரிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா மாநகராட்சியின் சட்ட விதிகளுக்கு இணங்க, அந்த நிறுவனங்கள் மீது உடனடி அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வசதியான வணிகச் சூழலை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற சோதனைகள் வரும் காலங்களில் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.