கோத்தா கினபாலு, பிப். 23: சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி 1,774 குடும்பங்களைச் சேர்ந்த 4,348 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,449 குடும்பங்களைச் சேர்ந்த 3,427 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகத்தின் அறிக்கைப்படி, பித்தாஸ், பைத்தான் மற்றும் தாவாவ் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் 70 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பித்தாஸ் மாவட்டத்தில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1,276 குடும்பங்களைச் சேர்ந்த 2,618 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 1,078 குடும்பங்களைச் சேர்ந்த 2,171 ஆக இருந்தது.
மேலும், பைத்தான் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அங்கு 443 குடும்பங்களைச் சேர்ந்த 1,485 பேர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேவேளையில், தாவாவ் மாவட்டத்தில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் என்ற எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படியே தொடர்கிறது.
மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் சபாவின் சில உட்புறப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவித்துள்ளது.
-- பெர்னாமா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது
23 பிப்ரவரி 2026, 4:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது; பேராக்கில் உயர்வு
Latchumy Ramamoorthy
28 ஜூன் 2026

selangor
வெள்ளம், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண பல்வேறு பரிந்துரைகளை ஆராயும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

selangor
ரவாங்கில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களால் திடீர் வெள்ள அபாயம் குறைந்தது
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
26 மே 2026

selangor
திடீர் வெள்ளம்: சுங்கை செபகாட் ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவு
Shalini Rajamogun
22 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



