கோத்தா கினபாலு, பிப். 23: சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி 1,774 குடும்பங்களைச் சேர்ந்த 4,348 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,449 குடும்பங்களைச் சேர்ந்த 3,427 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகத்தின் அறிக்கைப்படி, பித்தாஸ், பைத்தான் மற்றும் தாவாவ் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் 70 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பித்தாஸ் மாவட்டத்தில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1,276 குடும்பங்களைச் சேர்ந்த 2,618 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 1,078 குடும்பங்களைச் சேர்ந்த 2,171 ஆக இருந்தது.
மேலும், பைத்தான் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அங்கு 443 குடும்பங்களைச் சேர்ந்த 1,485 பேர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேவேளையில், தாவாவ் மாவட்டத்தில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் என்ற எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படியே தொடர்கிறது.
மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் சபாவின் சில உட்புறப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவித்துள்ளது.
-- பெர்னாமா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது
23 பிப்ரவரி 2026, 4:34 AM
தொடர்புடைய செய்திகள்
national
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது
Shalini Rajamogun
1 மார்ச் 2026

national
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 2,616 ஆக உயர்வு
Evelyn Moses
26 பிப்ரவரி 2026
national
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டம் மெம்பாகுட்
Shalini Rajamogun
25 பிப்ரவரி 2026

national
சபாவில் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
Shalini Rajamogun
24 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




