கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் சேவை வழக்கம் போல் இயங்குகிறது

19 பிப்ரவரி 2026, 4:00 AM
கிளானா ஜெயா எல்.ஆர்.டி  ரயில் சேவை வழக்கம் போல் இயங்குகிறது

ஷா ஆலம், பிப் 19: இன்று அதிகாலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரெபிட் கேஎல்  கிளானா ஜெயா வழித்தட ரயில் சேவைகள் காலை 8.52 மணி முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.

கோம்பாக் மற்றும் அம்பாங் பார்க் நிலையங்களுக்கு இடையிலான ரயில் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மின்னணு கூறுகளில் ஏற்பட்ட சீரற்ற மின்சாரம் காரணமாக, சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டதாக ரெபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில், பயணிகள் தடையின்றி பயணம் செய்வதை உறுதி செய்ய மாற்று ரயில் வழித்தடங்கள் மற்றும் இலவச பேருந்து சேவைகளை அதிகாரிகள் உடனடியாக வழங்கினர். பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சிக்னல் அமைப்பைக் கண்காணிக்கத் தொழில்நுட்பக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பயணிகளுக்கு வழிகாட்டவும் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தற்காலிகத் தடங்கலால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ரெபிட் ரயில் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பிற்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.