ஷா ஆலாம், ஜன 12- பன்றி பண்ணை விவகாரம் குறித்து சிலாங்கூர் மாநில வேளாண்மை மற்றும் அடிப்படை வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஐஆர் இஷாம் ஹஷிம் சிலாங்கூர் மாநில சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது
சிலாங்கூர் மாநில சுல்தானைச் சந்தித்த பிறகு தாம் மந்திரி புசாரைச் சந்திப்பேன் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஐஆர் இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சோங் சிப்பாட் பன்றி பண்ணை குறித்து சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா தனது அதிருப்தியை பதிவு செய்தார். சிலாங்கூர் மாநில அரசு பன்றி பண்ணைக்கு தற்காலிக பண்ணை இடம் தேர்வு குறித்து அரசருக்கு விளக்கம் அளிக்க விவசாய ஆட்சிக்குழு உறுப்பினரை அனுப்பியது .


