ஜனவரி 20 முதல் ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர்களைப் பெற்றுக் கொள்ளலாம்

9 ஜனவரி 2026, 4:33 AM
ஜனவரி 20 முதல் ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர்களைப் பெற்றுக் கொள்ளலாம்

ஷா ஆலம், ஜன 9 - ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டத்திற்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் ஜனவரி 20 முதல் தங்களின் வவுச்சர்களைப் பெற்று கொள்ளலாம் என யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) முகநூலில் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இவ்வாண்டிற்கான ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் யாவாஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஒத்திவைப்பு தற்காலிகமானது என்றும், வவுச்சர் கோரிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் பொதுமக்கள் பொறுமையாகக் காத்திருக்குமாறும் யாவாஸ் தனது முகநூல் பதிவில் கேட்டு கொண்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான எந்தவொரு சமீபத்திய தகவல்களையும் பெற உறுப்பினர்கள் எப்போதும் யாவாஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.