ஷா ஆலம், டிசம்பர் 31 — மாநில நிர்வாகம் இந்த ஆண்டு RM3 பில்லியன் வருவாயை சேகரித்துள்ளது. இது சிலாங்கூரின் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனை.இந்த நல்ல செய்தியைப் பகிர்ந்துகொண்ட மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த எண்ணிக்கை இதுவரை அடைந்த சாதனையின் உச்சம் என்று கூறினார்.
“அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கு புகழ்), 2025-ஆம் ஆண்டின் இறுதி நாளில், மாநில அரசு RM3 பில்லியன் வருவாயை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்ற நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்), சிலாங்கூர் 2026-இல் இன்னும் முன்னேற்றம் அடையும் வகையில் நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம்” என்று அவர் இன்று பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
RM3 பில்லியன் வருவாய் சேகரிப்பு, மாத தொடக்கத்தில் இருந்ததை விட குறிப்பிடத் தக்க முன்னேற்றமாகும். அப்போது அமிருடின், இதுவரை RM2.7 பில்லியனுக்கும் மேல் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இது மாநில அரசின் ஆரம்ப இலக்கான RM2.3 பில்லியனைத் தாண்டியது என்றும் கூறினார்.
அதை முழு மாநில நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்குக் காரணமாக அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், கடந்த மாதம் சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் அமிருடின், துணை நிறுவனங்களின் டிவிடெண்ட்கள், முதலீடுகள் மற்றும் நீர் கட்டணங்கள் மூலம் கணிசமான வருவாய் உருவாக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.
2022 முதல் ஆண்டுக்கு சுமார் RM40 மில்லியன் டிவிடெண்ட்கள் மட்டும் சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் ஆண்டுகளில் ஜீரோ டிஸ்சார்ஜ் கொள்கை (ZDP) மற்றும் டார்க் ஃபைபர் திட்டங்கள் போன்ற புதிய ஆதாரங்களிலிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கப் படுகிறது என்றார்.
கடந்த ஆண்டின் செயல்பாடும் எதிர்பார்ப்புகளை தாண்டியது. ஜனவரியில் மந்திரி புசார், மாநில அரசு RM2.858 பில்லியன் வருவாயை பதிவு செய்துள்ளதாக கூறினார். அது அப்போது ஒரு மைல்கல் சாதனையாக இருந்தது.


