ஷா ஆலம், டிச 30 - எதிர்வரும் ஜனவரி 1 முதல் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகவிருப்பதை டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது, அதன் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் முஹமட் யாசினின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் தாம் இம்முடிவை எடுத்தாக, அவரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதே தேதியில் சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தொடர்பு அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் விலகும் நிலைப்பாட்டையும் தாம் ஏற்றுக் கொண்டதாக, அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் அஸ்மின் அலி நன்றியை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


