பெய்ஜிங், டிச 9 - பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் காணாமல் போன MH370 விமான பயணிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடாக மலேசிய ஏர்லைன்ஸ் ஒரு வழக்கிற்கு 2.9 மில்லியன் யுவான் அல்லது 410,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வழங்க வேண்டும் என்று பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 8 பயணிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் 47 வழக்குகள் தீர்க்கப்பட்டு வழக்குகளாக மீட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 23 வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MH370 விமானம் காணாமல் போனது மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. 2014ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் 239 பேருடன் அந்த விமானம் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
அதில் பயணித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு சீன நாட்டவர்கள் ஆவர். பிறர் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.


