ஷா ஆலம், நவ 28: நாளை 7 ஏஹ்சான் மார்ட் கிளைகளில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து ஏஹ்சான் ரஹ்மா விற்பனை நடைபெறும். இந்த விற்பனை காலை மணி 9 முதல் நண்பகல் மணி 1 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“பிகேபிஎஸ் உடன் இணைந்து, தேவைப்படுபவர்களுக்குக் குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு நன்மைகளை வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.“ஏஹ்சான் மார்ட்டில் மலிவான மற்றும் தரமான அடிப்படைத் தேவைகளைப் பெறுங்கள்”.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், முட்டை ஒரு தட்டு 8.50 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 2 கிலோ சமையல் எண்ணெய் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 12.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது. இன்னும் கூடுதலாகப் பல பொருட்கள் இந்த மலிவு விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளன.


