ஷா ஆலம், அக் 29 - இன்று நண்பகல் 12 மணி வரை 8 மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை பெர்லிஸ், கெடா, பினாங்கு, சிலாங்கூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் சபா ஆகிய மாநிலங்கள் ஆகும்.
பொதுமக்கள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தை நாடலாம்.




