ad

2 மணி வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

1 அக்டோபர் 2025, 4:32 AM
2 மணி வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

கோலாலம்பூர், அக் 1: இன்று பிற்பகல் 2 மணி வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது  ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு  குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம்,  சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.