சிரம்பான், செப். 12 - போர்ட்டிக்சன், தஞ்சோங் அகாஸில் உள்ள சுங்கை லிங்கி ஆற்றின் முகத்துவாரத்தில் தனது இரண்டு பிள்ளைகளின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக 46 வயது தந்தை மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை அப்துல் ரஹ்மான் மாமுட் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு தனது ஆறு மற்றும் எட்டு வயது பிள்ளைகளின் மரணத்திற்கு காரணமானதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(ஏ) பிரிவின் கீழ் அப்துல் ரஹ்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
புரியப்பட்டட குற்றம் கடுமையானது என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க துணை அரசு வழக்கறிஞர் எம். புஸ்பா பரிந்துரைக்கவில்லை.
அதே நேரத்தில் ஒரு வழக்கறிஞர் யாரும் பிரதிநிதிக்காத குற்றம் சாட்டப்பட்டவர், தனது பிள்ளைகளினன் கல்லறைகளைப் காண விரும்புவதாக அழுதவாறு கூறி ஜாமீன் கோரி மன்றாடினார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து வழக்கை நவம்பர் 10 ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரும் 41 வயதுடைய ஒரு பெண்ணும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.
செப்டம்பர் 4 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், தஞ்சோங் அகாஸ் லிங்கி ஆற்றில் நகர்ந்து சென்று விழுந்த காரில் சிக்கி சகோதரனும் சகோதரியும் நீரில் மூழ்கி இறந்தனர்.