ஷா ஆலம், ஆக. 11 - கோலாலம்பூரில் மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிலாங்கூரில் உள்ள கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அம்மையம் கூறியது .
கிளந்தான், திரெங்கானு, ஜோகூர், சரவாக்
மற்றும் சபாவின் பல மாவட்டங்களிலும் இதே போன்ற வானிலை நிலவும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் கூடிய கனமழைக்கான அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்,
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளத்தை வலம் வரலாம். மேலும் அத்துறையின் சமூக ஊடகங்களையும் பின்தொடரலாம். அண்மைய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோலாலம்பூர், கோம்பாக், பெட்டாலிங்கில் மாலை 6.00 மணி வரை கடும் மழை
11 ஆகஸ்ட் 2025, 8:28 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Mavitthran
27 பிப்ரவரி 2026

national
ஜனவரி 1 ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் தொடர் மழை பொழியும்
Mavitthran
29 டிசம்பர் 2025

national
கிழக்குக் கரை பகுதிகளில், ஜோகூர் மாநிலத்தில் தொடர் மழை பெய்யும்- மெட்மலேசியா தகவல்
Mavitthran
23 டிசம்பர் 2025

national
டிசம்பர் 18 வரை நாட்டில் உள்ள சில மாநிலங்களில் மோசமான தொடர் மழை- மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
Mavitthran
16 டிசம்பர் 2025





