ஷா ஆலம், ஆக. 11 - கோலாலம்பூரில் மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிலாங்கூரில் உள்ள கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அம்மையம் கூறியது .
கிளந்தான், திரெங்கானு, ஜோகூர், சரவாக்
மற்றும் சபாவின் பல மாவட்டங்களிலும் இதே போன்ற வானிலை நிலவும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் கூடிய கனமழைக்கான அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்,
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளத்தை வலம் வரலாம். மேலும் அத்துறையின் சமூக ஊடகங்களையும் பின்தொடரலாம். அண்மைய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோலாலம்பூர், கோம்பாக், பெட்டாலிங்கில் மாலை 6.00 மணி வரை கடும் மழை
11 ஆகஸ்ட் 2025, 8:28 AM


