ஜனவரி 1 ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் தொடர் மழை பொழியும்

29 டிசம்பர் 2025, 7:43 AM
ஜனவரி 1 ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் தொடர் மழை பொழியும்
ஜனவரி 1 ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் தொடர் மழை பொழியும்

கோலாலம்பூர், டிச 29- ஜனவரி 1ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் தொடர் கனமழை பொழியும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

இந்த தொடர் கனமழையானது ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மட் ஹிஷாம் கூறினார்.

இதே காலக்கட்டத்தில் சரவாக் மாநிலத்தில் தொடர் கனமழை, சூரைக்காற்று வீசும் வேளையில் தென் சீனக்கடலில் பேரலைகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அண்மைய வானிலை நிலவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பொதுமக்கள் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது MYCUACA செயலியின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.