NATIONAL

ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கு வழங்கப்பட்ட மானியம் முடிவடையும்

30 ஜூலை 2025, 9:41 AM
ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கு வழங்கப்பட்ட மானியம் முடிவடையும்

கோலாலம்பூர், ஜூலை 30 - எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று, கோழி முட்டைகளுக்கு வழங்கப்பட்ட மானிய விகிதம் முடிவடையும். அதன் பிறகு போதுமான முட்டைகள் கிடைக்கும் என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு (KPKM) உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் முட்டை விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் அமைச்சு அதனை உடனடியாகக் கையாளும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்துள்ளார்.

கடந்த மே 1 ஆம் தேதி முதல் கோழி முட்டை மானிய விகிதம் ஒரு முட்டைக்கு 0.10 சென்னிலிருந்து 0.05 சென்னாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோழி முட்டைகளின் போதுமான உற்பத்தியை உறுதி செய்வதற்கான தொழில்துறையின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விலைக் கட்டுப்பாடு மற்றும் நீண்ட காலங்களுக்கு மானியங்களை வழங்குவது உள்ளூர் முட்டை உற்பத்தித் துறையின் வருவாய்க்கும் நாட்டின் நிதிக்கும் ஒரு நீடித்த தீர்வல்ல என்பதையும் அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.