NATIONAL

பிரதமர் சம்பந்தப்பட்ட  இரண்டு தவறான உள்ளடக்கங்களைப் பதிவேற்றிய  டிக்டோக் செயலி பயனர் மீது விசாரணை

22 ஜூலை 2025, 7:57 AM
பிரதமர் சம்பந்தப்பட்ட  இரண்டு தவறான உள்ளடக்கங்களைப் பதிவேற்றிய  டிக்டோக் செயலி பயனர் மீது விசாரணை

கோலாலம்பூர், ஜூலை 22 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட இரண்டு தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்களைப் பதிவேற்றிய டிக்டோக் செயலி பயனரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரித்து வருகின்றது.

நாட்டில் மக்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவது குறித்த பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு எதிர்ப்பாக இந்த உள்ளடக்கம் பதிவேற்றப்பட்டுள்ளது என்று எம்சிஎம்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்றொரு பதிவில், பிரதமரின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் தொடர்பாகவும் தவறான மற்றும் ஆபாசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கு உதவுவதற்காக, MCMC நேற்று சைபர்ஜெயாவிலுள்ள தலைமையகத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அந்த பயனரை அழைத்துள்ளதைத் தொடர்ந்து அவரின் கைத்தொலைபேசி மற்றும் சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கு மற்றும் தேசிய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க MCMC தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுப்பதில் திண்ணமாக உள்ளது என்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.