NATIONAL

பூட்டப்பட்ட காரில் ஆடவரின் சடலம் கண்டு பிடிப்பு- பினாங்கில் சம்பவம்

17 ஜூலை 2025, 4:53 AM
பூட்டப்பட்ட காரில் ஆடவரின் சடலம் கண்டு பிடிப்பு- பினாங்கில் சம்பவம்

தாசேக் குளுகோர், ஜூலை 17- பூட்டப்பட்ட கார் ஒன்றில் 34 வயது ஆடவர்

ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

இங்குள்ள தாமான் ஆரா முத்தியாரா கடைத் தொகுதியின் பின்புறத்

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆடவர் ஒருவர் மயங்கி கிடப்பது குறித்து

நேற்றிரவு 8.50 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகப் பினாங்கு

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி

இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் கூறினார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு

மஸ்டா சிஎக்ஸ்5 ரக கார் ஒன்று இயந்திரம் இயங்கிய நிலையில்

நிற்பதைக் கண்டதாக அவர் சொன்னார்.

காரின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவர் ஓட்டுநர்

இருக்கையில் மயங்கிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது என்று அவர்

அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

போலீசாருக்கு உதவும் வகையில் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு

காரின் கதவை தீயணைப்புத் துறையினர் திறந்தனர். அந்த ஆடவர் இறந்து

விட்டதை சம்பவ இடத்திலிருந்து சுகாதாரப் பணியாளர்கள்

உறுதிப்படுத்தினர் என்றார் அவர்.

இதனிடையே, மற்றொரு நிலவரத்தில் ஜெலுத்தோங்கில் உள்ள சுங்கை

பினாங் 100 அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள பூட்டப்பட்ட வீடொன்றில்

முதியவர் ஒருவர் இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று ஜோன்

சகுன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த வீட்டின் கதவைத் திறப்பதற்கு உதவி கோரி காவல்

துறையிடமிருந்து நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் தங்களுக்கு

அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் வீட்டின்

கதவைத் திறந்தனர். வரவேற்புக் கூடத்தில் காணப்பட்ட அந்த

முதியவரைச் சோதித்த மருத்துவப் பணியாளர்கள் அவர் இறந்து விட்டதை

உறுதிப்படுத்தினர் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.