ஜோகூர் பாரு, ஜூலை 16 - செம்பனை மரம் விழுந்து 14 வயது இளைஞர்
ஒருவர் உயிரிழந்தார். இந்த பரிதாபச் சம்பவம் பொந்தியான், ஆயர்
பாலோய், பாரிட் காத்திக்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் நேற்று
காலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.30 மணியளவில் தங்களுக்கு
தகவல் கிடைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்து விட்டதை பெனுட் சுகாதார கிளிக்கின் மருத்துவப்
பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாகவும் பொந்தியான் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷோபி தாயிப் கூறினார்.
வடிகால் வெட்டும் பணியில் நண்பருக்கு உதவுவதற்காக அந்த இளைஞர்
அங்கு சென்றுள்ளார். ஓய்வு எடுப்பதற்காக அருகிலுள்ள பாலத்தில்
அமர்ந்திருந்த போது திடீரென செம்பனை மரம் அவர் மீது விழுந்துள்ளது
என ஷோபி தெரிவித்தார்.
அந்த இளைஞரின் மரணத்தில் குற்றத்தன்மை எதுவும் காணப்படவில்லை
எனக் கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி
சார்ஜன் மேஜர் முகமது அஜிஸ் ஓத்மானை 019-7973696 என்ற எண்களில்
தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


