கோலாலம்பூர், ஜூலை 15: மலேசியர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தியை அறிவிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக இன்று தெரிவித்துள்ளார்..
அதை பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், தனது முகநூல் வழியாகப் பகிர்ந்து கொண்ட 'AKAN DATANG' என்று எழுதப்பட்ட சுவரொட்டி இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
“Suatu Penghargaan Luar Biasa Untuk Rakyat Malaysia. Bersama Malaysiaku," என அச்சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், "காத்திருங்கள்..." என்ற தலைப்பில் பிரதமர் அந்த சுவரொட்டியைப் பகிர்ந்துள்ளார்.
– பெர்னாமா








