NATIONAL

இ- ஹெய்லிங் ஒட்டுநர் கொலை - தந்தை, மகன் கைது

8 ஜூலை 2025, 7:46 AM
இ- ஹெய்லிங் ஒட்டுநர் கொலை - தந்தை, மகன் கைது

கோலாலம்பூர், ஜூலை 8 - அம்பாங்,  தாமான் பாண்டான் பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த  இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்  தந்தையும் மகனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர் மீதான பிரேதப் பரிசோதனையில் குற்றச் செயல்களுக்கான கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 26 முதல் 28 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்  73 மற்றும் 36 வயதுடைய தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இக்கொலை தொடர்பான விசாரணைக்காக மூங்கில் பிரம்பு மற்றும்  இடுக்கி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

சந்தேக நபர்களின் வீட்டில் 37 வயதுடைய நபர் இறந்து கிடப்பது குறித்து கோலாலம்பூர் மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களிடமிருந்து காவல்துறைக்கு ஜூன் 22ஆம் தேதி  இரவு 7.16 மணிக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட வேளையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை  இந்த வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியதாக முகமட் அசாம் கூறினார்.

அம்பாங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு ஜூலை 23 ஆம் தேதி சவப்பரிசோதனை அறிக்கை பெறப்பட்டது.  பாதிக்கப்பட்டவரின்  தோல் மற்றும் எலும்புகளில் உண்டான காயங்கள் காரணமாக தசைகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது . இதுவே மரணத்திற்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சுயதொழில் செய்பவர்களான இரண்டு சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ்  விசாரணைக்கு உதவுவதற்காக ஜூன் 27 முதல் வியாழக்கிழமை வரை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.