ஷா ஆலம், ஜூலை 8 - புத்ரா ஹைட்ஸ், எரிவாயு குழாய் வெடிச் சம்பவம்
தொடர்பில் மாநில அரசு நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த
விளக்கமளிப்புக் கூட்டத்தில் பெரிக்கத்தான் நேஷனல் சட்டமன்ற
உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த தகவலை அம்பலப்படுத்திய மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ்
வேங் சான், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளாக மூன்று செயலக
உறுப்பினர்கள் மட்டுமே அனுப்பப்பட்டனர் என்றார்.
இந்த விளக்கமளிப்பை, விசாரணையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடத்தியதோடு இதில் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களும் இடம்
பெற்றிருந்ததால் , மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விளக்கமளிப்பு முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாக விளங்கியது என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அவர்கள் (பெரிக்கத்தான் நேஷனல்) மூன்று பணியாளர்களை
மட்டுமே இந்த விளக்கமளிப்பு நிகழ்வுக்கு அனுப்பினர். கேள்விகளை
கேட்பதற்கு அவர்கள் பின்னர் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் இன்று
காலை மாநில சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னர் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்து விவாதிப்பதற்கு சிறப்பு
அமர்வு நடத்தப்பட வேண்டும் எனக் கோரி உலு கிளாங் தொகுதி
உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மற்றும் தாமான் மேடான்
உறுப்பினர் டாக்டர் அலிப் பஹாருடின் கொண்டு வந்த தீர்மானத்தை
சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர்கள் இந்த விளக்கமளிப்பு நிகழ்வைப் புறக்கணித்தனர்.
இதுதான் நடந்தது. இது குறித்து நான் மேலும் கருத்துரைக்க
விரும்பவில்லை. விளக்கமளிப்பின் போது பயன்படுத்தப்பட்ட காணொளி
சிலைட்களை அவர்கள் கேட்டனர். மந்திரி புசாரின் பேஸ்புக் பக்கத்தில் அவை கிடைக்கும் எனக் கூறி விட்டேன் என்று மந்திரி புசார் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார்.
இந்த விளக்கமளிப்பு மிகவும் பயன்மிக்கதாக இருந்தது. இதன் மூலம் தொழில்நுட்ப அம்சங்களை மக்கள் கற்றுக்கு கொள்ள முடியும். கேள்விகளைக் கேட்பதற்கு அனைவரும் ஊக்குவிக்கப்பட்டனர் என்றார் அவர்.


