NATIONAL

லோரியுடன் விபத்து - காரிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஓட்டுநர் சதுப்பு நிலத்தில் விழுந்து உயிர்த் தப்பினார்

2 ஜூலை 2025, 3:39 PM
லோரியுடன் விபத்து - காரிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஓட்டுநர் சதுப்பு நிலத்தில் விழுந்து உயிர்த் தப்பினார்

ஷா ஆலம், ஜூலை 2 - லோரியின் பின்புறம் மோதியதன் விளைவாக காரிலிருந்து தூக்கியெறியப்பட்டு சதுப்பு நிலத்தில் விழுந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார். இந்த விபத்து போர்ட் கிள்ளான், ஜாலான் பெலாபோஹான் பாராட் தெலுக் கோங்கில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.

இவ்விபத்து தொடர்பில் அதிகாலை 2.14 மணிக்கு அவசர அழைப்பு வந்தவுடன் பூலாவ் இண்டா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர்  மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

சம்பவ இடத்தில்  பெரோடுவா அருஸ் கார் ஒன்று லோரி மீது மோதியிருந்ததை அவர்கள் கண்டனர்.  காரின் ஓட்டுநர் விபத்து நடந்த பகுதியிலிருந்து தூக்கி எறியப்பட்டு 25 அடி (7.62 மீட்டர்) உயர பாலத்திலிருந்து கீழே உள்ள சதுப்பு சதுப்பு நிலத்தில் விழுந்தார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் லேசான காயங்களுக்குள்ளான 40 வயதுடைய அந்நபர் அதிகாலை 4.12 மணிக்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த மீட்பு நடவடிக்கை சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு முடிவடைந்தது என  அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.