ஜெர்த்தே, ஜூன் 27: பள்ளியில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கொடுமைப்படுத்துதல் வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக மாரா ஜூனியர் சயின்ஸ் கல்லூரியைச் (எம். ஆர். எஸ். எம்) சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
பெசூட் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டன் அசாமுதீன் அகமது @அபு கூறுகையில், இரண்டு படிவம் மூன்று மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் பெசூட் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு (ஐபிடி) வந்த பின்னர் இன்று மாலை 4 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.
" இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை இது, ஏழாகக் கொண்டுவருகிறது, இதில் 6 படிவம் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு படிவம் ஐந்து மாணவர் உள்ளனர்".
"இன்று பிற்பகல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்கள் காவலில் வைக்கும் விண்ணப்ப செயல்முறைக்கு நாளை கோல திராங்கானு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து மாணவர்கள் தண்டனைச் சட்டத்தின் 147 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு வசதியாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அதே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாக கூறப்படும் மற்றொரு படிவம் இரண்டு மாணவர் குறித்து நேற்று மாலை தனது குழுவுக்கு அறிக்கை கிடைத்ததாக அசாமுதீன் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணியளவில் பள்ளி தங்குமிடத்தில் நடந்த சம்பவத்தில் அதே குழு மாணவர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.


