கோலாலம்பூர், ஜூன் 26 - திரவமய கொக்கோயின் போதைப் பொருளைக் கடத்தியதாக ஒரு மலேசியர் மற்றும் மூன்று சிங்கப்பூர் நாட்டவர்கள் உட்பட நான்கு பேர் மீது இன்று அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அமலினா பஸிரா முகமது டோப் முன்னிலையில் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக மலேசியரான காங் சியென் மீ (வயது 57), மற்றும் மூன்று சிங்கப்பூரர்களான குவெக் கியென் செங் (வயது 45), டிரிஸ்டன் சியூ ஜின் ஜாங் (வயது 25), இவான் டான் ஷி சுவான் (வயது 31) ஆகியோர் தலையசைத்தனர்.
ஆயினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 11.45 மணிக்கு ஹோட்டலின் வெளியேறும் வாயிலில் 9,420.2 மில்லி லிட்டர் கோகோயின் போதைப் பொருளைக் கடத்தியதாக அந்த நான்கு பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) பிரிவின் கீழ் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இரசாயன அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இந்த வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.


