NATIONAL

மனைவியைக் கொன்றக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த போலீஸ்காரர் திடீர் மரணம்

27 மே 2025, 4:31 PM
மனைவியைக் கொன்றக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த போலீஸ்காரர் திடீர் மரணம்

கங்கார், மே 27 - கடந்த  2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த  ஒரு காவல்துறை அதிகாரி, நேற்று மாலை இங்குள்ள துவாங்கு ஃபௌசியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்தார்.

ஆராவ்,  குவார் நங்காவில் உள்ள  சீர்திருத்த மையத்தில் மயக்க நிலையில் காணப்பட்ட அந்த போலீஸ்காரர் பின்னர் இறந்துவிட்டது  உறுதி செய்யப்பட்டது.

திரெங்கானுவைச் சேர்ந்த 28 வயது நபரை மாலை 5.10 மணியளவில் இறந்த நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை  மருத்துவமனை நிர்வாகம்  உறுதிப்படுத்தியது என்று ஆராவ் மாவட்ட  காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது மொஹ்சின் முகமது ரோடி கூறினார்.

அந்த சீர்திருத்த மையத்தில் உள்ள தடுப்புக் காவல் அறையில் மாலை 4.30 மணியளவில் ரோந்து சென்று கொண்டிருந்த  வார்டன் தூங்கிக் கொண்டிருந்தாக கருதப்பட்ட அந்த ஆடவரை எழுப்ப முயன்றுள்ளார். எனினும்  ​​அவர் உணர்வற்ற நிலையில்  கிடப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர் அவர் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரியின்  ஆரம்ப விசாரணையில், அந்த நபரின் மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய எந்தவொரு குற்றச் செயலும்  கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்த நபரின் உடல்  சவப் பரிசோதனைக்காகக் கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின்  தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகமது  மொஹ்சின் தெரிவித்தார்.

மனநலப் பாதிப்பு கொண்ட அந்த போலீஸ்காரர் கடந்த  2017 முதல் பல மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.