கோலாலம்பூர், ஏப்ரல் 29 - அண்மையில் செராஸில் உள்ள ஒரு சமூகநல இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட18 சிறுவர்கள் தற்போது சமூக நலத்துறையின் தற்காலிகப் பராமரிப்பில் உள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்களில் 12 ஆண்கள் என்றும் இதர அறுவர் சிறுமிகள் என்றும் சிலாங்கூர் பெண்கள் மேம்பாடு சமூக நலக் குழுவின் தலைவர் அன்பால் சாரி கூறினார்.
தற்போது அச்சிறுவர்களின் உறுவினர்களைக் கண்டறியும் பணியில் ஜேகேஎம் துரிதமாக ஈடுபட்டுள்ளது. அத்தகையோரைக் கண்டறிந்தால் பராமரிக்க சரியான மற்றும் தகுதியான தரப்பினரிடம் அச்சிறார்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு சிறார் பராமரிப்பு காப்பகத்தில் சிறுவர்கள் தவறாக நடத்தப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டது.
அதை தொடந்து அந்த பராமரிப்பு காப்பகத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
பெர்னாமா


