NATIONAL

பினாங்கு மாநில ஒன்பதாவது ஆளுநராக துன் ரம்லி ஙா தாலிப் பொறுப்பேற்கிறார்

25 ஏப்ரல் 2025, 3:47 AM
பினாங்கு மாநில ஒன்பதாவது ஆளுநராக துன் ரம்லி ஙா தாலிப் பொறுப்பேற்கிறார்

கோலாலம்பூர், ஏப்ரல் 25 - எதிர்வரும் மே முதலாம் தேதி தொடங்கி பினாங்கு மாநில ஒன்பதாவது ஆளுநராக முன்னாள் மக்களவைத் தலைவரான துன் ரம்லி ஙா தாலிப் பொறுப்பேற்கிறார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பினாங்கு மாநில ஆளுநர் நியனமக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிடமிருந்து அவர் அந்நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

அதே நிகழ்ச்சியில் 84 வயதுடைய ரம்லிக்கு துன் அங்கீகாரமுடைய, Seri Maharaja Mangku Negara எனப்படும் SMN விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்வாண்டு மே முதலாம் தேதி தொடங்கி 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் பினாங்கு மாநில அரசியலமைப்பின் முதலாவது சட்டவிதியின் படி பினாங்கு மாநில ஆளுநராக ரம்லி அப்பதவியில் நீடிப்பார்.

கடந்த 2021ஆம் ஆண்டு மே முதலாம் தேதியில் இருந்து அப்பதவியை வகித்த துன் அஹ்மட் ஃபுசி அப்துல் ரசாக்கிற்குப் பதிலாக ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்சடங்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் யோவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.