NATIONAL

ஆறாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி மரணம்

22 ஏப்ரல் 2025, 5:44 AM
ஆறாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி மரணம்

செந்தூல், ஏப்ரல் 22 - கோலாலம்பூர், செந்தூல், பத்து மூடா PPR அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுமி மரணமுற்றார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அது குறித்து தகவல் கிடைத்ததாக. செந்தூல் காவல்துறை தலைவர் துணை ஆணையர் அஹ்மாட் சுகார்னோ முகமட் சஹாரி தெரிவித்தார்.

அச்சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. அங்கு CCTV கேமராக்களும் இல்லை.

அதனால், தற்போதைக்கு திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சுகார்னோ சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.