NATIONAL

ஃபூ வா மற்றும் ஃபெங் யி எனும் பாண்டா ஜோடி சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்

21 ஏப்ரல் 2025, 2:18 AM
ஃபூ வா மற்றும் ஃபெங் யி எனும் பாண்டா ஜோடி சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்

புத்ராஜெயா, ஏப்ரல் 21 - கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி தேசிய மிருகக்காட்சி சாலையின் பாண்டா கரடிகள் பராமரிப்பு மையத்தில் (பிகேபிஜி) வைக்கப்பட்டிருந்த ஃபூ வா மற்றும் ஃபெங் யி எனும் பாண்டா ஜோடி எதிர்வரும் மே மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படவிருக்கின்றன.

இவ்வாண்டு தொடங்கி 2035ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு புதிய ராட்சத பாண்டா ஜோடியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மலேசியா கைழுத்திட்டுள்ளது.

அதனால், ஃபூ வா மற்றும் ஃபெங் யி எனும் பாண்டா ஜோடி சீனாவிற்கு அனுப்பப்படவிருப்பதாக இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்தது.

கடந்த புதன்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தபோது மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அந்த பாண்டா ஜோடி திரும்ப அனுப்பப்படுவதற்கு முன்னர், தயார்நிலை பணியாக, அவற்றின் சிறந்த நிலையிலான சுகாதாரத்தை உறுதிசெய்ய ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி தனிமைப்படுத்தப்படுகின்றன.

தனிமைப்படுத்தப்படும் காலம் முழுவதிலும், ஃபூ வா மற்றும் ஃபெங் யியை அருகில் காண வருகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.

எனினும், குறிப்பிட்ட நேரங்களில் பிகேபிஜிலிருந்து அவற்றைக் காண்பவதற்கான வாய்ப்பு உள்ளது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.