சிரம்பான், ஏப்ரல் 17 — கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10) 2 மில்லியன் ரிங்கிட் கேட்டு இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் ஒரு சந்தேக நபர் இன்று முதல் 14 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 50 வயதுடைய அந்தப் பெண்ணுக்கு எதிராக மாஜிஸ்திரேட் ஃபைரூஸ் சியுஹாதா அம்ரான் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்ததாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அகமது ஜாஃபிர் முகமட் யூசோஃப் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 12.55 மணிக்கு செராஸில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கு 1961 கடத்தல் சட்டப் பிரிவு 3(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் பண்டார் புக்கிட் திங்கி, கிள்ளானில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 20 முதல் 31 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் திங்கள்கிழமை (ஏப்ரல் 14) முதல் 14 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டனர்.
— பெர்னாமா


