NATIONAL

எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தினால் எந்தவொரு மருத்துவமனை வசதிகளும் பாதிக்கப்படவில்லை

11 ஏப்ரல் 2025, 2:25 AM
எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தினால் எந்தவொரு மருத்துவமனை வசதிகளும் பாதிக்கப்படவில்லை

தாப்பா, ஏப்ரல் 11 - கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தினால் எந்தவொரு மருத்துவமனை வசதிகளும் பாதிக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, இச்சம்பவத்தில் இதுவரை எந்தவோர் உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

"இவ்வளவு பெரிய ஒரு தீச்சம்பவத்தில் தற்போது எந்தவோர் உயிரிழப்பும் பதிவாகவில்லை, சிலர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ வசதிகளும் பாதிக்கப்படவில்லை", என்று அவர் கூறினார்.

பேராக், தாப்பா மருத்துவமனையில், பத்தாங் பாடாங் மாவட்டத்தின் சுகாதாரத் துறை பணியாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.