NATIONAL

மளிகைக் கடையில் கொள்ளையிட்ட ஆடவர் கைது

9 ஏப்ரல் 2025, 5:34 AM
மளிகைக் கடையில் கொள்ளையிட்ட ஆடவர் கைது

கூச்சிங், ஏப்ரல் 9 - கடந்த மார்ச் 30-ஆம் தேதி முவரா தெபாஸில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமது இரண்டு நண்பர்களுடன் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் ஒரு வாரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை மணி 4 அளவில், கிதா காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு அந்த 21 வயது ஆடவரைக் கைது செய்தது.

ஐந்து குற்றப் பதிவுகளைக் கொண்ட அந்நபர், கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகக் கூச்சிங் மாவட்ட காவல்துறை இடைக்காலத் தலைவர் சுப்ரிடென்டன் மெர்பின் லிசா தெரிவித்தார்.

கோத்தா சமரஹானில் காணாமல் போனதாக நம்பப்படும் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

'சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணைக்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அவர் ஆறு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று மெர்பின் லிசா குறிப்பிட்டார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 395/397 கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி மற்றும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.