NATIONAL

தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகளை வழங்க அமைச்சர் ஙா கோர் மிங் பிரதமரை சந்திக்கிறார்

8 ஏப்ரல் 2025, 4:47 AM
தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகளை வழங்க அமைச்சர் ஙா கோர் மிங் பிரதமரை சந்திக்கிறார்

புத்ரா ஹைட்ஸ், ஏப்ரல் 8 - சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிறந்த உதவிகள் வழங்குவது குறித்து கலந்துரையாட வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவுள்ளார்.

"பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து கலந்துரையாட நான் பிரதமரைச் சந்தித்து பேசுவேன். முடிவுகள் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக அறிவிப்போம்," என்றார் அவர்.

தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கும், தற்காலிக நிவாரண மையத்திற்கும் தாம் வருகை மேற்கொள்ளாதது குறித்து சில தரப்பினர்கள் பிரச்சனையாக்க முயற்சிப்பதை பொருட்படுத்தக் கூடாது என்று அவர் எடுத்துரைத்தார்.

மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான தீர்வு வழங்குவதையே, தாம் நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் விளக்கினார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.