புத்ராஜெயா, ஏப்ரல் 4 - X தளத்தில் ``kuil haram`` பதிவை பதிவிட்டதன் தொடர்பில், ஆடவர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனை மலேசியத் தொடர்பு - பல்லூடக ஆணையமான MCMC உறுதிப்படுத்தியது.
இன-மத மோதல்களை உருவாக்குவதோடு பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் அவரின் பதிவு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரின் வாக்குமூலம் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தடயவியல் பரிசோதனைக்காக, அவரின் விவேகக் கைப்பேசியும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் அவ்வாடவர் விசாரிக்கப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்


