NATIONAL

சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டதன் தொடர்பில் ஆடவர் விசாரணை

4 ஏப்ரல் 2025, 9:22 AM
சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டதன் தொடர்பில் ஆடவர் விசாரணை

புத்ராஜெயா, ஏப்ரல் 4 - X தளத்தில் ``kuil haram`` பதிவை பதிவிட்டதன் தொடர்பில், ஆடவர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனை மலேசியத் தொடர்பு - பல்லூடக ஆணையமான MCMC உறுதிப்படுத்தியது.

இன-மத மோதல்களை உருவாக்குவதோடு பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் அவரின் பதிவு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் வாக்குமூலம் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தடயவியல் பரிசோதனைக்காக, அவரின் விவேகக் கைப்பேசியும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1998-ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் அவ்வாடவர் விசாரிக்கப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.