NATIONAL

ஆற்றின் அருகே ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

3 ஏப்ரல் 2025, 8:13 AM
ஆற்றின் அருகே ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

அலோஸ்டார், ஏப் 3 - வெளிநாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஆடவரின் சடலம் கெடா சுங்கை ராஜா ஆற்று நீர் குழாய் அருகே கண்டுப்பிடிக்கப்பட்டது.

நேற்று மதியம் 12.43 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு காவல்துறை குழு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைவர் துணை கமிஷனர் சித்தி நோர் சலாவத்தி தெரிவித்தார்.

அந்த ஆடவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் சில நாட்களுக்கு முன் அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

70 வயதுடைய அந்த நபரின் மோட்டார் சைக்கிளோட்டும் லைசென்ஸ் கண்டுப்பிடிக்கப்பட்டதோடு மார்ச் 23 திகதி அவர் காணவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையில் புகார் செய்திருந்தாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.