NATIONAL

நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு

27 மார்ச் 2025, 4:12 AM
நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு

கோலாலம்பூர், மார்ச் 27 - நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு வழங்க, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 29-ஆம் தேதி இரவு மணி 11.59 வரையில், இரண்டு நாள்களுக்கு இந்தக் கழிவு அமலில் இருக்கும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட டோல் குத்தகை நிறுவனத்திற்கு திரும்ப செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகைக்காக, அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி தாக்கம் ஒரு கோடியே

96 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று நந்தா லிங்கி தெரிவித்தார்.

இத்திட்டத்தில் தேசிய எல்லையைத் தவிர்த்து, அனைத்து டோல்களிலும் முதல் வகுப்பு வாகனங்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.