NATIONAL

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்த இலவச வகுப்பு ஏற்பாடு

20 மார்ச் 2025, 8:14 AM
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்த இலவச வகுப்பு ஏற்பாடு

கோலாலம்பூர், மார்ச் 20 - தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில், SEC எனப்படும் Saraswathy English Challenge அமைப்பு இயங்கலை வாயிலாக ஒன்றரை மணி நேர இலவச ஆங்கில வகுப்புகளை நடத்துகிறது.

நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்த வகுப்பு Microsoft Teams வாயிலாக வாரம் இருமுறை மாலை 6.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெறும்.

இந்த ஆங்கில வகுப்பு எதிர்வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த இலவச வகுப்பில் பங்கேற்க விரும்பும் ஆறாம் ஆண்டு மாணவர்கள், www.saraswathyengiishchallenge.com என்ற இணைய அகப்பக்கத்திற்குச் சென்று தங்களைப் பதிந்துகொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையத் தளத்தையோ அல்லது 017-355 5738 என்ற கைப்பேசி எண்களுக்கு அழைத்தோ தெரிந்துகொள்ளலாம்.

இது, Basic Bay நிறுவனத்தின் ESG எனப்படும் சுற்றுச் சூழல், சமூக மற்றும் நிர்வாக கடப்பாட்டின் கீழ் தொடங்கப்பட்ட முன்னெடுப்பாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.